மனிதனுக்கு மட்டுமே சிரிப்பு சொந்தமானது என்று ராஜாராணி திரைப்படத்தில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் மனைவி மதுரம் அம்மையாரிடம் கூறி பாடலொன்றை பாடியிருப்பார் . அதில் விதம் விதமான சிரிப்புகளை வகைப்படுத்தி பாடியிருப்பார். அசட்டு சிரிப்பு, ஆனவச்சிரிப்பு, சாகச சிரிப்பு, சங்கீத சிரிப்பு என வகைவகையாய், நகைச்சுவையாகபாடியிருப்பார்.
அதேபோல ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு பாடல் வரும் . அங்கே சிரிப்பார்கள் சிரிக்கட்டும் அது ஆனவச்சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் சிரிப்போ ஆனந்த சிரிப்பு என்று குழந்தையிடம் எம்ஜிஆர் பாடுவதாக காட்சி.
அதேபோல
சிரித்து வாழவேண்டும்......
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்...
நீ சிரித்தால் தீபாவளி. ...
இது மாதிரி ஏராளமான திரைப்படப்பாடல்களுண்டு
மனிதனின் அத்தனை குணங்களையும் சிறப்பாக வெளிக்கொனரும் சக்தி சிரிப்புக்கு மட்டுமே உண்டு. உள்ளத்தில் உள்ளதை உள்ளபடிகொண்டுவரும் சிரிப்பே உண்மையானது. உள்ளத்தில் உள்ளதை மறைத்து போலியாய் சிரித்தவர் வாழ்க்கை ஒரு நாள் சிரிப்பாய் சிரித்து விடும்.
இந்த படங்களை பார்த்தபின் என் கருத்துக்களை மாற்றிக் கொண்டேன். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் தான். விலங்குகள் சந்தோசத்தில் மட்டுமே சிரிக்கும். மனிதர்கள் போல மனதில் உள்ளதை மறைத்து வில்லங்கமாய் சிரிக்க தெரியாது.
சிரிப்பு என்பது உண்மையாய், அடிமனத்திலிருந்து விட்டால் வாழ்க்கை என்றுமே ஆனந்தம் தான்.
Yes you're correct sir
ReplyDeleteAbsolutely correct sir, by v.t.s
ReplyDelete