சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 5 May 2012



தவ நடிக பூபதி பி.யு.சின்னப்பா



தவ நடிக பூபதி என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட நடிகர் பி.யு.சின்னப்பாபூர்வீகம் புதுக்கோட்டை ஆகும்.
 உலக நாதப்பிள்ளைமீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக 
சின்னப்பா வெள்ளிக்கிழமை அன்று பிறந்தார்.
 உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள்
சின்னப்பா பிறந்த தேதி 05.05.1916 ஆகும்.  
.8வது வயதில் தத்துவ மீனலோசனி வித்வபால சபாவில் நடிக்க
வந்த சின்னப்பா பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேந்து,கதாநாயகனாக உயர்ந்தார்..ஐந்தாம் வயதிலேயே நடிக்க 
வந்த சின்னப்பா நடிப்பு ,பாட்டு,குஸ்தி,சிலம்பம்,என
 பல்துறையிலும்வித்தகராக திகழ்ந்திருக்கிறார் 
.பின்னர் ஸ்பெசல் நாடகங்களில் நடித்து வந்த சின்னப்பாவை
  ஜூபிடர் பிக்சர்ஸார் தங்கள் தயாரித்த  சந்திரகாந்தா படத்திற்கு 
ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்சந்திரகாந்தா படத்தில் 
சுண்டூர் இளவரசனாகத் தோன்றிய சின்னப்பாவின் நடிப்பும்,
 பாட்டும்சிறப்பாக அமைந்திருந்தன.
சந்திரகாந்தா படம் 1936ல் வெளிவந்த போது சின்னசாமி
என்றபெயரில் அறிமுகமாகி பின்னர்சின்னப்பா என்ற
பெயரினைப்பெற்றார்.
பிறகு சின்னப்பா பஞ்சாப் கேசரிராஜ மோகன்அனாதைப் பெண்,
 யயாதிமாத்ரு பூமி ஆகிய ஐந்து படங்களில் நடித்தார்.
 இப்படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றதால்கொஞ்ச காலம்  படங்களில்  நடிக்காமலிருக்க வேண்டியதாயிற்று.
தொழிலின்றி இருக்கும் நடிகர்களுக்கு துணிந்து சந்தர்ப்பம் 
அளிப்பதிலும்புதிது புதிதாய் நடிகர்களைப் படங்களில் புகுத்துவதிலும் சாதனைபடைத்த  திரையுலக ஜாம்பவான் டி.ஆர்.சுந்தரம்,
வேலையின்றி இருந்து வந்த சின்னப்பாவைத் தேடிப்பிடித்து தம் உத்தமபுத்திரன் படத்தில் அவருக்கு கதாநாயகன் வேடத்தை அளித்தார்.
1940ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படம் சூப்பர்ஹிட் ஆகியது.
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக . சின்னப்பாவின் 
இரட்டை வேட நடிப்பு ரசிகர்களை அசர வைத்தது
அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலும்சூப்பர் ஹிட் ஆகி 
வசூலில் சாதனை படைத்தது
அந்த வருட சினிமா பட தேர்தலில் உத்தமபுத்திரன் முதல்
 இடத்தை பெற்றது
இதைத் தொடர்ந்து அன்றைய சினிமா உலகில் சின்னப்பா சூப்பர் 
ஆக்டர் ஆக திகழ்ந்தார்.



அதன் பின்னர் தயாளன்தர்மவீரன்பிருதிவிராஜன்,
 மனோண்மணி ஆகிய படங்களில் நடித்தார்.
 இவற்றுள் மனோண்மணியில் தான் சின்னப்பா அதிகம்
 பாராட்டுதல் பெற்றார்.
இந்த கால கட்டங்களில் தான் ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ
 பாகவதர் ரசிகர்களும்நடிக மன்னர் பி.யூ.சின்னப்பா ரசிகர்களும் \
ஆங்காங்கே மோதி கொண்டனர்.
 சில இடத்தில் அடிதடியும் நடந்து உள்ளது.
பிருதிவிராஜனில் பிருதிவிக்கும்சம்யுத்தைக்கும் ஏற்பட்ட
 கதைக் காதல் அவ்வேடத்தில் நடித்த சின்னப்பா.சகுந்தலா இவர்களிடையே நிஜக்காதலாய் முடிந்தது.
சின்னப்பா .சகுந்தலாவை 05.07.1944.ந் தேதி அன்று சட்டப்படி 
திருமணம் செய்துக் கொண்டார்.


சின்னப்பா ஆர்யமாலா படத்தின் மூலம் நிறைய புகழை பெற்றார்
பிறகு வந்த கண்ணகி படம் சின்னப்பாவை பாக்ஸ் ஆபீஸ் 
கதாநாயகனாக ஆக்கியது




.
கண்ணகிக்குப் பிறகு சின்னப்பா குபேரகுசேலர்ஹரிச்சந்திராஜெகதலப்ரதாபன்மஹா மாயா
 ஆகிய மூன்று படங்களும் மிகுந்த வெற்றியைப் பெற்றன.
 மஹாமாயா சுமாரான படமாய் இருந்தது
ஆனால் சின்னப்பாவை பொருத்தவரையில் நடிப்பில்
 படத்திற்குப் படம் அசத்தி வந்திருந்தார்.
சின்னப்பா நடித்து வெளிவந்த மற்ற படங்கள் பங்கஜவல்லி,
 துளசி ஜலந்தாவிகடயோகிகிருஷ்ணபக்தி முதலியவையாகும்.
 கிருஷ்ணபக்தி அவருக்கு நிறைய புகழை வாங்கி தந்தது.துணிந்து 
ஏமாற்று கபட சந்நியாசியாகநடித்து அசத்தியிருந்தார்.
மங்கையர்கரசி யில் மதுராந்தகன்காந்தரூபன்சுதாமன்
 என்று மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.
 இதுவும் ஒரு சூப்பர் ஹிட் படமாக சின்னப்பாவுக்கு அமைந்தது.
சின்னப்பா நடித்து வெளிவந்த கடைசி படங்கள் வன சுந்தரி,
 ரத்னகுமார்சுதர்ஸன் ஆகும்
சுதர்ஸன் என்ற படம சின்னப்பா மறைவுக்கு பிறகு தான் வெளிவந்தது.
நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று எல்லோராலும் 
புகழப்பட்டவர் சின்னப்பா


.

கடைசி வரை எளிமையான கதர் சட்டையே அணிந்திருக்கிறார்.
முதன் முதலில் பாரதியின் பாட்டை திரைப்படத்தில் 
பாடிய பெருமையை பெற்றவர்.
தமிழ் திரையுகில் முதன் முதலில் நடிக மன்னன் என புகழப்பட்ட 
சின்னப்பா 23/09/1951 ம் ஆண்டு இரவு 9.45 மணிக்கு தனது முப்பத்தி
 ஐந்தாவது வயதில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.




No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...