சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 10 June 2025

வாசித்தல் மிக இனிது

படிப்பாளி 

வாசிக்கிறார் 

பலவகை நூல்களை....


நூல்கள்

திறக்கின்றன

புதியதோர்உலகை...


உலகோ

காட்டிடும் ஆயிரம் 

அற்புதங்களை..... 


அற்புதங்கள் 

அறிவியல் வரலாறென 

ஆயிரமாயிரம்...... 


வித்வான் வாசிக்கிறார் 

வீனை மிருதங்கமென 

இசைக்கருவிகளை... 


இசையால்   

இன்பமூட்டினார் 

இன்னுலகையே... 


மகான்கள்  வாசித்தனர்

 மனிதனின் முகம் 

பார்த்தவர் இன்னலை..


இன்னல்கள் 

தீர்ந்திட இனிய 

வழி காட்டினர்.... . 


படைப்பாளிகள் படைத்ததும் 

வித்வான்கள் இசைத்ததும் 

மகான்கள் உரைத்ததும் 

உலகம் மேன்மையுறவே... 


எப்படியாயினும்       

வாசித்தலென்றும் 

மிக இனிதே..... 

1 comment:

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...