சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 27 April 2025

எதிர்பாராத முத்தம்

 சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் எதேச்சையாக பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் என்ற காவியம் பொன்முடி என்ற பெயரில் திரைப்படமாக ஒலிபரப்பப்பட்டபோது காணநேர்ந்தது.

அப்படத்தை கண்டு விட்டு நான் கிறுக்கிய சில வரிகள்..... 

பட்டினத்து வணிகன் மகன் பொன்முடி அம்மான் மகளை மணப்பதற்கு 

வந்தது தடை மைத்துனர்களுக்குள்

 வந்த வம்பு சண்டையால்... பிரித்திட துடித்தான் அம்மான் மகனை காத்திட அனுப்பி வைத்தான் அப்பன் குலத்தொழிலாய் வடக்கு நோக்கி..... 

ஆரிய துறவிகள்

 யாகத்தின் பெயரால்

 அடித்த கொள்ளை 

வடித்த கொலையால் அநியாயமாய் மாண்டான் வணிகன் மகன் பொன்முடி.. அத்தானை காண 

ஓடிவந்த பூங்கொடியாள் கண்டனள் பிணமாய் ஆங்கே...

எதிர்பாரா முத்தத்துடன்

இனிய காதலர்

இறப்பின் மூலம்..... 


No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...