சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 17 April 2025

அனைவருக்கும் கல்வி என்போம்

 


ஒரு கண்ணில் வெண்ணெய்

 மறு கண்ணில் சுண்ணாம்பு

 வைப்போனை மனிதனென ஏற்போமோ... 


ஒரு குழந்தைக்கு சுவை உணவும், 

 மறு குழந்தைக்கு பட்டினியும்

வைப்பாளை தாய் என்போமா... 


ஒரு குழந்தைக்கு நற்கல்வியும்

மறு குழந்தைக்கு வேலையும்

கொடுப்பானை அரசென்போமா..


ஒரு குழந்தைக்கு வித்தையும்

மறு குழந்தைக்கு வறுமையும்

கொடுப்பானை கடவுளென்போமா..


கையில் வீணையுடன் தான்மட்டும்

கற்றுகொண்டே குழந்தைகளுக்கு

கல்விமறுப்பாளை கலைமகளென்போமா

..

அனைவருக்கும் கல்வி

மறுத்து வியாபாரமாக்கிடும்

அரசை அறம்பாடிட வேண்டாமா.....


No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...