ஒரு கண்ணில் வெண்ணெய்
மறு கண்ணில் சுண்ணாம்பு
வைப்போனை மனிதனென ஏற்போமோ...
ஒரு குழந்தைக்கு சுவை உணவும்,
மறு குழந்தைக்கு பட்டினியும்
வைப்பாளை தாய் என்போமா...
ஒரு குழந்தைக்கு நற்கல்வியும்
மறு குழந்தைக்கு வேலையும்
கொடுப்பானை அரசென்போமா..
ஒரு குழந்தைக்கு வித்தையும்
மறு குழந்தைக்கு வறுமையும்
கொடுப்பானை கடவுளென்போமா..
கையில் வீணையுடன் தான்மட்டும்
கற்றுகொண்டே குழந்தைகளுக்கு
கல்விமறுப்பாளை கலைமகளென்போமா
..
அனைவருக்கும் கல்வி
மறுத்து வியாபாரமாக்கிடும்
அரசை அறம்பாடிட வேண்டாமா.....
No comments:
Post a Comment