மழை வராதா என
மனிதர்கள்
ஏங்கி தவிக்கையில்
மழையும்
காற்றுமாய் வந்து
மரங்களை
வேரோடு சாய்த்தாயே ....
பணத்துக்கும்
பவிசுக்கும்
பதவிக்குமாய்
மரங்களை மனிதர்கள்
சாய்த்தது
போதாதென்று
இயற்கையை
நேசிப்போர்
ஏங்கி தவிக்க
நீயும்
ஏன்
வீழ்த்தி
சென்றாய்...
வார்தா
நீ வாராதிருந்தாலே
நன்றாய்
இருந்திருக்கும்......