மரம்
ஆதி மனிதனின்
முதல் ஆலயம்..
ஆதி மனிதனிலிருந்து
ஆயிரமாயிரம் பறவைகளின்
சரணாலயம்...
குனிந்து நட்டவனையும்
அண்ணாந்து பார்க்கவைக்கும்
அதிசயம்.....
அள்ள அள்ள குறையாது
அள்ளிக்கொடுக்கும் அற்புதம்....
அழித்தாலும் மனிதனை
மன்னித்து வாழவைக்கும்
தாய்....
வழிபடவேண்டிய மரங்களை
அழிக்காமல் பாதுகாப்போம்........
\