தலைநகரத்தின்
மையத்தில்
தலைமையக வளாகம்...
உடனிருந்த
நண்பர்களை இழந்த
தனி மரம்....
தலைமுறைகளை
தாண்டி
தனியாய் நிற்கிறது......
தர்பார் பல கண்டும்
தளராமல்
நிற்கிறது....
ஆயிரமாயிரம்
மக்களை
அன்றாடம் காண்கிறது....
ஆனந்தம்..
ஆரவாரம்...
அழுகை....
கோரிக்கை..
போராட்டம்...
பாராட்டு.....
அத்தனையும்
கண்டும் அலட்டாமல்
நிற்கிறது......
ஒற்றைக்காலில்
தவமிருக்கும்
முனிவர் போல......