Thursday 28 January 2016

தனி மரம்....


 தலைநகரத்தின்
மையத்தில்
தலைமையக வளாகம்...
உடனிருந்த
நண்பர்களை இழந்த
தனி மரம்....
தலைமுறைகளை
தாண்டி
தனியாய் நிற்கிறது......
தர்பார் பல கண்டும்
தளராமல்
நிற்கிறது....
ஆயிரமாயிரம்
மக்களை
அன்றாடம் காண்கிறது....
ஆனந்தம்..
ஆரவாரம்...
 அழுகை....
கோரிக்கை..
போராட்டம்...
பாராட்டு.....
அத்தனையும்
கண்டும் அலட்டாமல்
 நிற்கிறது......
ஒற்றைக்காலில்
தவமிருக்கும்
முனிவர் போல......

Friday 8 January 2016

மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டிற்கு
மத்திய அரசு அனுமதி
மகிழ்ந்தனர்
தமிழர் பெருமக்கள் .......

Friday 1 January 2016

வருக வருக புத்தாண்டே

வருக வருக
புத்தாண்டே
வருகின்ற
2016 ஆம் ஆண்டு
வண்ண மயமாய்
மலர்ந்திடவும் ………
எண்ணுகிற எண்ணங்கள்
ஏற்றமயமாய்
இருந்திடவும் ……….
கைக்கொள்ளும்
காரியங்கள்
கைகூடிடவும் ………
உலக மாந்தர்
உயர்வு பெற்றிடவும்
வாழ்க வளமுடன்
என
மனமார வாழ்த்திடும்

 நெஞ்சம்

விடை பெறுக 2015.........

விடை பெறுக 2015.........
பட்டதும்
 பெற்றதும்
கற்றதும் ……….
அடைந்ததும்                                                            
இழந்ததும்
மகிழ்ந்ததும்………
வீழ்ந்ததும்
மீண்டு
 எழுந்ததும் …………
அத்தனையும்
நன்மைக்கே.....
வருகின்ற
காலம்
நமக்கானதாய்
நம்முடையதாய்
அமைந்திட
வாழ்த்தும்
அன்பு நெஞ்சம்.