ஊரெங்கும் ஒரே மழை
குளங்கள்உடைந்தன
சாலைகள் மறைந்தன
ஊரெல்லாம் வெள்ளக்காடு
மக்கள் மடிந்தனர்....
முன்பு ஆண்டவர்கள்
ஆள்பவர்களை குறை கூறினர் ....
ஆள்பவர்கள்
ஆண்டவர்களை குறை கூறினர் ...
மக்கள்
ஆண்டவரை குறை கூறினர் .....
ஆண்டவர் கூறினார்
“மண் கொடுத்தேன்
மழை கொடுத்தேன்
மரம் செடி கொடி கொடுத்தேன்
ஆறு குளம் கொடுத்தேன்
வாழ வழிவகை
அத்தனையும் கொடுத்தேன்.
தன்னலத்தால் அத்தனையும்
அழித்து விட்டு
என்னை ஏன் அழைக்கிறாய்....
“