Wednesday 14 March 2012

ஓநாய் நீதி

ஓநாய்:         
நான் குடிக்கும் நல்ல நீரை 
ஆட்டுக்குட்டியே ......
நீ ஏன் நான்கு காலால் 
கலக்குகிறாய் ஆட்டுக்குட்டியே?
ஆட்டுக்குட்டி: 
நீர் குடித்த மிச்சமன்றோ 
ஓநாய் அய்யாவே........
ஒதுங்கி நின்று குடிக்கின்றேன்
ஓநாய் அய்யாவே........ 
ஓநாய்: 
போன வருடத்திலே
 ஆட்டுக்குட்டியே ......
போக்கிரித்தனமாய் 
பேசினாய் ஆட்டுக்குட்டியே .?.....  
ஆட்டுக்குட்டி:
போன வருடத்திலே
ஓநாய் அய்யாவே.......
நானிந்த பூமியிலே 
பிறக்கவில்லைஓநாய் அய்யாவே.......
ஓநாய்: 
உன் தாயே வைதிருக்கும்
 ஆட்டுக்குட்டியே ...
அதற்க்குஉன்னைத்தானே
கொன்றிடுவேன்ஆட்டுக்குட்டியே ...
                                                **************
சின்ன வயதில் என் தந்தையார் சொல்லிக்கொடுத்த 
நீதிப்பாட்டு.ஓநாய் குணமுடையவர்கள்தங்களுக்கு
தேவை என்றால் எப்படிப்பட்ட நீதியையும் படைப்பார்கள்.

இந்த பாட்டையும் உலக நடப்பையும் நீங்கள் ஒப்பிட்டு 
பார்த்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல........

Monday 12 March 2012

திருவப்பூரில் தேரோட்டம்



புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் தொடர்ச்சியாக 12.03.2012 அன்று தேரோட்டம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின் காட்சிகள் சில......

                                  வினோத அலங்காரத்துடன் வேண்டுதல்கள் 


                                                    வாத்திய முழக்கங்களுடன் 

                                                       ஊர் கூடி தேரிழுக்க.......
                                                  அசைந்தாடும் அழகான தேர்....





                                  அருள் பாலிக்கும் அன்னை முத்துமாரியம்மன் 




Wednesday 7 March 2012

புதுகையில் தெப்ப திருவிழா

புதுக்கோட்டையில் 7.3.2012   புதன்  கிழமை    அன்று மாசி மகத்தை 
முன்னிட்டு அருள்மிகு சாந்தநாத சுவாமி ,சாந்தாரம்மன் திருக்கோவில்  ,பல்லவன்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











Tuesday 6 March 2012

சும்மா

மின் வெட்டா ?அப்படீன்னா?எங்க வீட்ல தான் 
இன்வெர்ட்டர் இருக்கே
!

                       அட போங்கப்பா !இப்ப தான் நிம்மதியா இருக்கேன்.....
                                           எங்க போனாலும் விடமாட்டீங்களா?
                                          அட கொஞ்சம் சீன் போடவிடுங்கப்பா   
                              என் ரோடு..... என் வீடு...... யார் என்ன கேக்குறது?
ஒரு மூத்த குடிமகன சும்மா விடுங்கப்பா. 
                                சத்தியமா இதுக்கெல்லா  நான் காரணமில்லே....

Monday 5 March 2012

எங்கள பழையபடியே விடுங்கோ

ஒண்ணுமே புரியலேங்கோ ........
படிச்சா தான் உலகம் தெரியுன்னாங்கோ
படிச்சா புரவு தான் 
ஒண்ணுமே புரியலேங்கோ ......
நாங்க வந்தா 
ஆன  தாரோம்  ,
அம்பாரி தாரோம் 
அல்லாமே தாரோன்னாங்க.....
இப்ப பாத்தா 
உள்ளதெல்லா போச்சு
 நொள்ள கண்ணாச்சு .....
ஒண்ணுமே புரியலேங்கோ ........
தேர்தல்ன்னாங்க...
கூட்டனின்னாங்க...
வோட்டே என்னலேங்கோ
கூட்டணி போச்சுங்கிராங்கோ...
ஒண்ணுமே புரியலேங்கோ ........

Thursday 1 March 2012

பூக்காரி

மல்லிபூ ....
   பிச்சிபூ.....
முல்லைப்பூ ....
         என
தொண்டை வரள  
கூவி விற்றவளின் 
கொண்டையில்     
பூ வில்லை.........