Monday 27 July 2015

காலத்தை வென்ற கலாம்



கடலோர மண்ணில்
அக்னி சிறகுகளோடு பிறந்த
அற்புத மனிதன்....
கலாம் என்றால்
அறிவு என்பதை
நிரூபித்த கல்வியாளன்....
வின்னுலகிற்க்கும்
மன்னுலகிற்க்கும்
ஏவுகணைகளால்
பாலம் அமைத்த அறிவியலாளன்.....
அன்னை இந்தியாவின்
அணு சக்தியை காட்டி
அசர வைத்த அற்புத.புதல்வன்.....
கனவு காண்பது
கற்பனைக்கல்ல..
செயல்பட என உரைத்த ஆசிரியன்
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
என்ற  தமிழ் கூற்றை
உலகத்துக்கு
உரக்க கூறிய உத்தமன்...
மேகங்களின் அரசி
மேகாலயத்தில் விண்ணோடு
கலந்தாரே இறை மனிதன்.
மலர்ந்தது  15.10.1931
உதிர்ந்தது  27.7.2015