Thursday 23 May 2013

காத்திருந்து....காத்திருந்து.....


காத்திருத்தல் சுகமான அனுபவம்...
காதலிக்கு........
கல்யாணத்துக்கு.....
குழந்தைக்கு......
வளமான வாழ்வுக்கு........
......................................................
வெற்றியின்றி
வெட்டியாய்...
குஞ்சு பொறிக்கா.
கூமுட்டைக்காய்
வெட்டியாய் அடை காத்து
வெற்றியின்றி
வெட்டியாய்......
....................
காத்திருந்தால்?!


Wednesday 22 May 2013

நகர் வலம்......


மாதம் மும்மாரி 
மழை பொழிகிறதா...
குடி படைகள் நலமா 
குசலம் விசாரித்தனர்.....

மழை பொய்த்த்ததும்
மண் வெடித்ததும்
குடிசைகள் தீய்ந்ததும்
குடிகள் மாய்ந்ததும்

ஊர்  போன போக்கு 
ஒன்றுமே தெரியாமல்
குசலம் விசாரித்தனர்
குடி படைகள் நலமா?