ஒருமுறை ராமநாதபுரம் சென்றிருந்தபோது அருகே கடற்கரையை பார்க்க சென்றிருந்தேன். அங்கு ஒரு 50, 60 பேர் சேர்ந்து கடலில் இருந்து வலையை இழுத்துக் கொண்டிருந்தனர். விசாரித்த போது முதல் நாளே கடலில் வலையை போட்டுவிட்டு வந்து விடுவார்கள். மறுநாள் வலையின் இரு புறமாக ஆட்கள் இருந்து இழுத்துக்கொண்டே வருவார்கள். கடைசியாக வலையில் சிக்கி இருக்கக்கூடிய மீன்களை அள்ளுவார்கள். நான் சென்றிருந்தபோது வலையில் ஓட்டை விழுந்து விட்டது. அதனால் பெரும்பகுதி மீன்கள் தப்பி சென்று விட்டன. பாவம் குறைவான அளவு தான் அவர்களுக்கு கிடைத்தது. வந்த மீன்களை விட இழுக்கின்ற ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி அதிகம் என்று புலம்பினார்கள். கஷ்டமாக இருந்தது...
Sunday, 5 January 2025
Subscribe to:
Post Comments (Atom)
ஆயுசுக்கும் கூட வரவா....
ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா.... வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க... குரங்கு...

-
மதுரை கான்பாளையம் முதலாவது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீடு. அதில் சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு வீடுகள். குடி இருந்தவர்களில் ஓரளவு நடுத்தர குடு...
-
மிக நீண்ட காலத்திற்கு முன்பு இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ந்திருக்கிறேன். சிலவற்றில் பேசும் நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன். அத...
-
கேமராவில் பதிவான சில மனதை உடைக்கும் தருணங்கள். மனித வியாபாரிகள் மனிதர்களை விலங்குகள் போல பாவித்து, சங்கிலிகளால் பினைத்திருக்கும் பழைய புகை...
No comments:
Post a Comment