சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 30 January 2025

இந்திய செய்தித்தாள்கள் தினம்.

 ஒருமுறை படைப்பு கடவுளும் நாரதரும் சந்தித்துக் கொண்டனர்.  

நாரதர் சலித்துக் கொண்டார். 

"இங்கு மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே போகிறது. நினைத்தவர்கள் எல்லாம் ராஜாக்கள் ஆகிறார்கள். ஆளாளுக்கு ஆட்சி செய்கிறார்கள். நான் நேரடியாக இவ்வளவு பேரிடம் போய் எப்படித் தான் கலகம் செய்வது." 

படைப்பு கடவுள் சொன்னார். 

"ஒன்றும் கவலைப்படாதே. உன்னுடைய சிரமத்தை குறைக்க நான் ஒரு வழி கண்டுபிடித்து விட்டேன். காலங்கள் மாறிக்கொண்டே போகிறது. விஞ்ஞானமும் வளர்ந்து கொண்டே போகிறது. மக்களுக்கு அறிவும் வளர்ந்து கொண்டே போகிறது. உன் ஒருவனால் அத்தனை பேரிடமும் கலகம் செய்வது அவ்வளவு எளிதல்ல. மேலும் மக்கள் தெளிவாகும் போது உன்னுடைய தொழில்நுட்பம் மிகவும் பழையதாகி விட்டது அதனால் புதிய தொழில்நுட்பங்கள் தேவை... ஆதலால்....."

படைப்பு கடவுள் இழுக்க ஆரம்பித்த உடன் நாரதருக்கு பதை பதைப்பு வந்து விட்டது. 

என்ன சொல்லப்போகிறாரோ என்று யோசிக்கலானார். 

" ஆதலால்... என்று இழுக்கிறீர்களே என்ன செய்யலாம் என்று சொல்லவில்லையே" என்று நாரதர் கேட்டார். 

" ஆதலால் தான். என்ன சொல்ல வருகிறேன் என்றால் உனக்கு பதிலாக இன்னும் கலகம் இழுக்க நிறைய பேரை உருவாக்கலாமா என்று யோசிக்கிறேன்" என்றார் படைப்பு கடவுள்.

"அப்படியானால் இன்னும் நிறைய நாரதர்களை உருவாக்கப் போகிறீர்களா?, தேவர்கள் உலகம் தாங்காதே" என்று நாரதர் பயந்து கொண்டே கேட்டார். 

நாரதருக்கு தன்னுடைய பதவி போய்விடும் என்ற பயம் வந்துவிட்டது. "இல்லை, இல்லை. நாரதர்களை உருவாக்க போகவில்லை. நாரதரையே எடுத்துவிடலாம் என்று இருக்கிறேன்" என்றார் படைப்பு கடவுள்.

"நாரதராகிய என்னை எடுத்துவிட்டு எந்த தேவரை போடப் போகிறீர்கள்" என்று நாரதர் கேட்டார். 

" இல்லை இல்லை மனிதர்களிடம் தான் அந்த பொறுப்பை ஒப்படைக்க போகிறேன்" என்றார் படைப்பு கடவுள்.

" மனிதர்களிடமா... . அவர்கள் எப்படி செய்வார்கள்". என்று நாரதர் கேட்டார்.

 "மனிதர்களிடம் சிலரை உருவாக்கி, அவர்களுக்கு செய்தித்தாள் என்ற சாதனத்தை ஒப்படைக்க போகிறேன்" என்றார் படைப்பு கடவுள்.

நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்பது ஐதீகம். மனிதர்கள்..... என்று நாரதர் இழுத்தார். 

அவர்கள் மனிதர்கள் தானே? நிச்சயமாக நன்மையில் முடியாது. கலகம் கலகமாக தானே முடியும்... என்றார் படைப்பு கடவுள்.

"செய்தித்தாள்கள் போக முடியாத இடங்களில் இந்த கலகத்தை யார் செய்வது" என்று நாரதர் கவலைப்பட்டார். 

படைப்பு கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார். 

"அதனால என்ன அந்த காலி இடத்தை நிரப்புகிற வேலையை சமூக ஊடகங்கள் செய்யும்"


நேற்று இந்திய செய்தித்தாள்கள் தினம். இந்திய செய்தித்தாள்கள் தினத்திற்கு ஏதாவது வாழ்த்து செய்தி சொல்ல வேண்டுமே என்பதற்காக மண்டையை உடைத்துக் கொண்டு இந்த செய்தியை தயாரித்து உள்ளேன். யாரும் சண்டைக்கு வந்து விடாதீர்கள்..... 




No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...