சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 12 January 2025

தைப்புத்தாண்டே நம் புத்தாண்டு.....

 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

அறிவியலின் பாற்பட்டு

உழவரும் தமிழரும் 

கொண்டாடியதே

தைப்புத்தாண்டு...


ஆரியம் வந்து 

ஆண்ட மன்னர்

துணையோடு

ஆன்மீகம் பெயரால்

வந்ததே சித்திரை புத்தாண்டு....


ஆணுக்கும் ஆணுக்கும்

பிறந்ததாம்

அறுபது ஆண்டுகள்

அத்தனையும்

ஆரியத்தின் பெயரால்....


ஆங்கிலேயர் வந்ததும்

அவர்பின்னே

ஓடி அனைவரும்

ஆடிமகிழ்ந்ததாம்

ஆங்கில புத்தாண்டு....


தமிழாய்ந்த அறிஞர்

பலர்கூடி அறிவித்தார்

தமிழ் புத்தாண்டு

தைப்புத்தாண்டே

நம் புத்தாண்டு.....


எத்தனையோ ஆண்டு

பொறுத்துருந்த

தமிழ்மக்கள் மகிழ

கலைஞர் அறிவித்தார்

தைப்புத்தண்டினையே....


மீண்டும் மீண்டும்

தடுத்தாலும்

தமிழும் தமிழரும் வாழும் மட்டும்

தைப்புத்தாண்டே

நம் புத்தாண்டு....... 


No comments:

Post a Comment

இயற்கை பேரிடர்?!

   மரங்களை வெட்டியது நாம்  குன்றுகளை அழித்தது நாம். நீரின் ஓட்டத்தைத் தடுத்தும் நாம்   வெள்ளம் வரும்போது  சொல்கிறோம் வெட்கமேயின்றி " இய...