சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 30 October 2024

தீபா வலி

 நாங்கள் பட்டாசுகளையும் மத்தாப்புகளையும். வேடிக்கையாய் கொளுத்தி மகிழ்ந்து கொண்டிருக்கையில், 

 அங்கே ஏவுகணைகளாலும் வெடிகுண்டுகளாகலும்          மக்கள் கொத்துக்கொத்தாய் மடிந்து கொண்டிருந்தார்கள்.... 

இங்கே விதவிதமாய் தின்பண்டங்களும்    பதார்த்தங்கள் ருசித்து கொண்டிருக்கையில், 

அங்கே மக்கள்                உணவுக்கும்                  குடிநீருக்கும்  அல்லாாடி கொண்டிருந்தனர்....

இங்கே பிள்ளைகள்    பாதுகாப்பாய்                               வெடி வெடிக்க பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், 

அங்கே குழந்தைகள்            குண்டடி பட்டு                              இரத்த காயங்களோடு                        செத்துக் கொண்டிருந்தார்கள்.

 நாங்கள் புத்தாடைகளும் அணிகலன்களுமாய் ஆடிக்கொண்டிருக்கையில், 

அங்கே குளிரிலும் பணியிலும் கந்தல் ஆடைகளோடு கருகிக் கொண்டிருந்தார்கள். 

நாங்கள் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கையில், 

அவர்கள் சமாதானத்துக்காக ஆங்காங்கே கையேந்தி கொண்டிருந்தார்கள். 

அங்கே மரண வியாபாரிகள் நாட்டாமை செய்து கொண்டிருக்கையில், 

 உலகை படைத்த இறைவன் எங்கோ அமைதியாய் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான். 

நாங்களும் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 


1 comment:

  1. அருமையான பதிவு. எதார்த்த வாழ்வு

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...