சரியாக நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இரு சின்ன பையன்கள் மதுரையிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார்கள்.அவர்களை சின்ன பையன்கள் என்று சொல்வதில் தப்பில்லை.மீசைகூட முளைக்காத டீன் ஏஜ் பையன்களை எப்படி அழைப்பது.இருவரும் பட்டயபடிப்பு முடித்து வேலைக்காக மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.
இருவருமே ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள்.படிப்பை தவிர வேறு ஒன்றுமில்லை.இருவருமே ஒன்றாக கல்லூரியில் படித்தார்கள்.ஒன்றாய் என் சி சி யில் இருந்தார்கள் .வேலை எதிர்காலம் என்று எந்த கனவும் இல்லை.இல்லை என்ன தெரியாது.ஏதோ அவர்கள் நல்லகாலம் அவர்கள் படிப்பு அரசு கல்லூரியில் மட்டுமே இருந்தது.நல்ல மதிப்பெண்கள் இருந்ததால் கல்லூரியில் நேர்மையாகவே இடம் கிடைத்தது.சிபாரிசு ஊழல் ஏதும் இல்லாதால் இலவசமாகவே கிடைத்தது.
நல்லவேளையாக வேலை காலியிடங்களை விட படித்து வருபவர்கள் குறைவாக இருந்ததால் அனைவருக்கும் வேலை கிடைத்தது.போட்டிக்கு பட்ட படிப்பு ,மேல்பட்டபடிப்பு படித்தவர்கள் வரவில்லை.
நேர்காணலுக்கு போன போது இவர்களை யாரும் பொருட்டாகவே நினைக்கவில்லை.ஏனென்றால் இவ்வளவு சின்ன பையன்கள் நேர்காணலுக்கு வருவார்கள் என்று யாரும் நினைத்திருக்கவில்லை .கடிதத்தை பார்த்த பின் தான் நம்பினார்கள்.வேலை வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள் என்று எண்ணி அவர்களுக்கு அலுவலகத்திலேயே தேனீரெல்லாம் வாங்கிக்கொடுத்து ,வேண்டிய நல்லஇடத்தில் வேலை போட்டுக்கொடுத்து மாவட்ட சுகாதார அதிகாரி அனுப்பி வைத்தார்கள்.
வேலைக்கு சென்ற இடத்திலும் இந்த சின்ன பையன்களை வேலைக்கு வந்தவர்கள் என்று யாரும் நம்பவில்லை.பணிஆணை,மற்றும் சான்றிதழ்களை பார்த்த பின் தான் அவர்களை வேலைக்கு சேர்த்துக்கொண்டனர்.அவர்கள் வேறு யாருமல்ல இவர்கள் தான்.
த.சக்திவேலுவும்,சீனி.கார்த்திகேயனும் தான் அவர்கள் .
நேர்காணலுக்கு வந்த நாள் 19.9.1978
பணியில் சேர்ந்த நாள் 20.9.1978.
No comments:
Post a Comment