அடக்கியாண்ட ஆங்கிலேயன்
அரசாள வைத்தது ஆங்கில ஆண்டு...
அவனே வரவுசெலவுக்கென
அமைத்தது வருமான ஆண்டு.....
பிள்ளைகள் படிப்புக்கென
படைத்தான் கல்வியாண்டு.....
முப்பால் படைத்த
முத்தான குறள்
தந்த வள்ளுவராண்டு
முத்தமிழ் கண்ட
தமிழனுக்குண்டு
தைப்புத்தாண்டு,,,,
உலகுக்கெல்லாம்
அகம் புறமென
இலக்கியம் கண்டு
வாழ்ந்து காட்டிய
தமிழனுக்கெதுக்குஆடம்பரமாய்
ஆங்கில புத்தாண்டு?!
அருமையாய் தான்
கொண்டாடிவோமே
நமக்கான தமிழராண்டை........
No comments:
Post a Comment