சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 28 December 2024

வள்ளலார்

 


சனாதனமும், 

சாதி மத பேதமும் 

மனிதனை பிடித்த நோக்காடு

அதனால் புவி ஆகுமே

சாக்காடு எனவுரைத்தார்..... 


வாடிய பயிரையும் 

பசித்த வயிரையும்

கண்டு நொந்தார்

பசிப்பிணி நீங்க

 மருந்து கண்டார்... 


நந்தனார் வரிசையில் 

தீக்கிரையாக்கி

சோதியில் ஐக்கியமாக்கி

அவரையும் கடவுளாக்கி

பொய்யளந்து விட்டாரே..... 

@@@@@########@@@##


வள்ளலார் அருள்மொழிகள்


"சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே

 சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

 அபிமானித்  தலைகின்ற உலகீர்!" (அருட்பா 5566)


 " மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது

வருணாச் சிரமமெனு மயக்கமும் சாய்ந்தது

 (அருட்பா 4513)


"சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்" (அருட்பா 4075)


."சாதிமதந் தவிர்த்தவரே அணையா வாரீர் " (அருட்பா 4476)


"வேதாக மங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்னபயனோ இவை. (திருவருட்பா 5516)

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...