சனாதனமும்,
சாதி மத பேதமும்
மனிதனை பிடித்த நோக்காடு
அதனால் புவி ஆகுமே
சாக்காடு எனவுரைத்தார்.....
வாடிய பயிரையும்
பசித்த வயிரையும்
கண்டு நொந்தார்
பசிப்பிணி நீங்க
மருந்து கண்டார்...
நந்தனார் வரிசையில்
தீக்கிரையாக்கி
சோதியில் ஐக்கியமாக்கி
அவரையும் கடவுளாக்கி
பொய்யளந்து விட்டாரே.....
@@@@@########@@@##
வள்ளலார் அருள்மொழிகள்
"சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
அபிமானித் தலைகின்ற உலகீர்!" (அருட்பா 5566)
" மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருணாச் சிரமமெனு மயக்கமும் சாய்ந்தது
(அருட்பா 4513)
"சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்" (அருட்பா 4075)
."சாதிமதந் தவிர்த்தவரே அணையா வாரீர் " (அருட்பா 4476)
"வேதாக மங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்னபயனோ இவை. (திருவருட்பா 5516)
No comments:
Post a Comment