தொண்டே நல்ல அறமாகும்
பல்லுயிர் காக்கும்
பூவுலகை காப்பதும் தொண்டே......
தன்னுயிர் போல்
அனைத்துயிர் நேசிப்பதும் தொண்டே....
பக்கத்திருப்பவன் துன்பம் காணச்சகியாமல் உழைப்பதும்
தொண்டே.....
மானுடம் செழிக்க
மனிதம் தழைத்திட உழைத்தலும
தொண்டே...
அன்னை தமிழ் அகிலமெங்கும் பரப்பிடுதலும் தொண்டே....
அனைத்தும் பொதுவாக்கி
அகிலம் காத்திடுதலும் தொண்டே....
அகிலத்திற்கான தொண்டே அறமாகும்....
அதுவே என்றும் நலமாகும்.
No comments:
Post a Comment